டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர்: மக்கள் அவதி

டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர்: மக்கள் அவதி


 

புதுடெல்லி,


டெல்​லி​யில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை குறைந்​த​பட்ச வெப்​பநிலை 4.2 டிகிரி செல்​சி​யஸாக குறைந்​தது. டெல்​லி​யில் நடப்பு குளிர்​காலத்​தில் பதி​வான மிகக் குறைந்த வெப்​பநிலை​ இதுவாகும். டெல்​லியிலும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களிலும் மூடு​பனி​யுடன் கூடிய குளிர் அலை வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யானா உட்பட வட மாநிலங்​கள் முழு​வதும் அடுத்த 3 நாட்​களுக்கு கடுமை​யான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இந்த மாநிலங்​களி​லும் டெல்​லியைப் போன்​று, மிகக் குளி​ரான காலைப் பொழுது 4.2 டிகிரி செல்​சி​யஸில் பதி​வாகி உள்​ளது.


மலைப்பிரதேசங்களான இமாச்சல பிரதேசம் மற்​றும் உத்​த​ராகண்​டிலும் கடுமை​யான குளிர் நில​வு​கிறது. சில இடங்​களில் உறைபனி​யும் காணப்​படு​கிறது. உறைபனி​யுடன் கூடிய கடும் குளிர் காரண​மாக வட மாநிலங்​களின் வி​மானங்​கள் மற்​றும் ரயில் சேவை​களில்​ தொடர்ந்​து தாமதம்​ ஏற்​பட்​டு வரு​கிறது. வாகன ஓட்டிகள் அதிகாலை வேளைகளில் வாகனங்களில் செல்ல கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%