news Breaking News
clock

டிரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்

டிரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்


 

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அவமதிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக பதிலளிக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ஒவ்வொரு நாட்டிலும் பிரதமர் மோடியை டிரம்ப் அவமதித்து வருகிறார். சமீபத்தில் தென் கொரியாவில்.


ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்துவதற்காக, வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடியை பயமுறுத்தியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.


ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறுகிறார்.


பயப்பட வேண்டாம் மோடி அவர்களே, தைரியமாக பதிலளியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.


தென் கொரியாவில் நடைபெற்ற பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போரை வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நிறுத்தியதாக இன்று மீண்டும் கூறினார். மேலும், போரின்போது 7 புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறிய டிரம்ப், பிரதமர் மோடியை நகரத்தைவிட மோசமானவர் என்றும், ஒரு கொலைகாரர் என்றும் விமர்சித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News