ஜோக் உருவாகும் விதங்களில் இதுவும் ஒன்று

ஜோக் உருவாகும் விதங்களில் இதுவும் ஒன்று



ஒரு சாதாரண தகவலை ஜோக்காக மாற்றும் விதம்...


அப்பா பையனிடம் கேட்கிறார்:


" என்னடா அஞ்சு வருஷமா படம் டைரக்ட் பண்ணப் போறேன்னு சொல்லிட்டே இருக்கே... எப்படா பண்ணப் போறே...!? "


பையன் பதில் சொல்றான்...


" அப்பா... இப்ப கூட ஒரு படம் டைரக்ட் பண்ணி முடிக்கப் போறேன்... அதுவும் கிளைமேக்ஸை அரக்கோணத்துலேயும், கும்பகோணத்துலேயும் எடுக்கப் போறேன்..! "


இந்த உரையாடலில்

 எந்த ஜோக்கும் கிடையாது...


இதை ஜோக்காக மாற்றலாமா...?


அப்பா பையனிடம் கேக்கற கேள்வியில் மாற்றமில்லை...


பையன் பதிலில் ஒரு மாற்றம்...


" அப்பா... இப்பக்கூட ஒரு படம் டைரக்ட் பண்ணி முடிக்கப் போறேன்... அதுவும் கிளைமேக்ஸை ரெண்டு கோணத்துல எடுத்துட்டுருக்கேன்...! "


அப்பா ஆச்சரியத்துடன் கேட்கிறார்...


" அப்படியா...!? "


பையன் பதிலளிக்கிறான்...


" ஆமா... ஒண்ணு அரக்கோணத்துல... இன்னொண்ணு கும்பகோணத்துல...! "


இரண்டு உரையாடல்களிலும் சொல்ல வந்த தகவல் ஒன்றுதான் என்றாலும் இரண்டாவது உரையாடலில் சிரிப்பு வருகிறதல்லவா...!!!


-------------------------------------------


அடுத்த உரையாடல்...


மனைவி ( கணவனிடம்):


" ஏன் ரொம்ப சோகமா இருக்கறீங்க...!? "


கணவன் அதன் காரணத்தை சாதாரண தகவலாக கூறுதல்:


" டிக்கெட் எடுக்க கியூவில் நிற்கும் போது எவனோ பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சிட்டான்...!! "


இந்த தகவலை சற்று மாற்றி சிரிப்பு வரும்படிக் கூறுதல்...


" டிக்கெட் எடுக்க வரிசையில நிக்கறப்ப எவனோ கை வரிசைய காட்டிட்டான்டி... என்னோட பர்ஸ் போச்சு...!!! "


இதிலும் தகவல் ஒன்றுதான்...ஆனால் இரண்டாவது உரையாடல்தான் சிரிப்பை வரவழைக்கும்.


இது போல சிந்தித்தால் அனைவருமே ஜோக்குகளை உருவாக்கி மகிழலாம்... மகிழ வைக்கலாம்...!!!



-லட்சுமி ஆவுடைநாயகம்,

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%