செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறு -திருவத்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது:
Sep 05 2025
204
செய்யாறு செப் .6,
செய்யாறு -திருவத்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எச் முபாரக் என்பவர் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு நேற்று சென்னையில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதினை வழங்கி கௌரவித்தார் .உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அரசு உயர் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள், பிற சங்கங்களை சேர்ந்தவர்கள், உள்ளிட்டோர்அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%