சுற்​றுலா தலமாகிறது வாஜ்​பாய் கிராமம்: ரூ.27 கோடி ஒதுக்கி உ.பி. அரசு உத்​தரவு

சுற்​றுலா தலமாகிறது வாஜ்​பாய் கிராமம்: ரூ.27 கோடி ஒதுக்கி உ.பி. அரசு உத்​தரவு

புதுடெல்லி:

முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்​பாய் பிறந்த கிராமம் சுற்​றுலாத் தலமாகிறது. இதற்​காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்​தர​விட்​டுள்​ளது. முன்​னாள் பிரதம​ரான, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்​பா​யின் 101-வது பிறந்த நாள் வரும் டிசம்​பர் 24-ல் கொண்​டாடப்பட உள்​ளது. இதை விமரிசை​யாகக் கொண்​டாட மத்​திய அரசும் பாஜக​வும் தயா​ராகி வரு​கிறது.


இச்​சூழலில், ஆக்​ரா​வில் உள்ள வாஜ்​பா​யின் மூதாதையர் கிராம​மான படேஷ்வரை ஒரு முக்​கிய ஆன்​மிக மற்​றும் பாரம்​பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தர பிரதேச சுற்​றுலாத் துறை திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த கிராமத்​தில் மொத்​தம் 101 சிவன் கோயில்​கள் உள்​ளன. இதை மேம்​படுத்தி அங்​கு, யாத்​ரீக அனுபவத்தை ஏற்​படுத்த உ.பி. அரசு முடிவு செய்​துள்​ளது.


இதற்​காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உள்​ளது. பிரோ​சா​பாத் சாலை​யில் அமைந்​துள்ள படேஷ்வர் கிராமத்​துக்கு பிரம்​மாண்​ட​மான ஒரு நுழைவு வாயில் அமைக்​கப்பட உள்​ளது. இக்​கி​ராமத்​தின் முக்​கிய உள்​கட்​டமைப்பு மற்​றும் வசதி​களை மேம்​படுத்​து​வதற்கு தனி நிதி ஒதுக்​கீடு செய்​யப்பட உள்​ளது.


இதன் மூலம், ஆக்​ரா​வில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க வரும் சுற்​றுலாப் பயணி​கள், அரு​கிலுள்ள படேஷ்வருக்​கும் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மத்​திய பிரதேச எல்​லை​யான சம்​பல் பள்​ளத்​தாக்​கின் அருகே படேஷ்வர் அமைந்​துள்​ளது. இது, அதன் பண்டைய படேஷ்வர்​நாத் கோயிலுக்​கும், பிர​திஹாரா வம்​சத்​தின்​போது நாகரா பாணி கட்​டிடக்​கலை​யில் கட்​டப்​பட்ட 101 சிவன் கோயில்​களுக்​கும் பெயர் பெற்​றது.


இக்​கோ​யில்​களின் தல புராணத்​தின்​படி, சிவபெரு​மான் ஒரு காலத்​தில் இங்கு ஒரு ஆலமரத்​தின் கீழ் ஓய்​வெடுத்​த​தாக நம்பப்படுகிறது. இந்த இடத்​தின் தனித்​து​வ​மான அம்​சம் ஆக்​ரா​வில் ஓடும் யமுனை நதி​யின் தலைகீழ் ஓட்​டம் ஆகும். இது மட்டுமல்லாமல், அங்கு மீசை மற்​றும் பெரிய கண்​களைக் கொண்ட சிவன் மற்​றும்​ பார்​வ​தி தேவியின் சிலைகளும் உள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%