சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் நடமாடும் காய்கறி - கனிகள் வண்டிகள் வழங்கும் விழா
Aug 09 2025
25

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025 - 26 சார்பில் விவாசய பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 50 வண்டிகள் 50 சதவிகித மானியத்துடன் வழங்கபட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமை வகித்தார். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிவகங்கை, திருப்புத்தூர், கல்லல், எஸ்.புதூர், தேவகோட்டை ஒன்றியங்களுக்குட்பட்ட 50 பயனாளிகளுக்கு நடமாடும் வண்டியினை வழங்கி விவசாயிகள் இந்த வண்டியின் மூலம் காய்கறி விற்பனை வளத்தை
பெருக்கி வாழ்க்கைத் தரத்தையும் உயர்தத் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?