கோவை தொழில் துறையினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மத்திய பட்ஜெட்?

கோவை தொழில் துறையினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மத்திய பட்ஜெட்?


 

கோவை: உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு ஏற்றம், நாளுக்கு நாள் உயரும் தங்கம், வெள்ளி விலை, ஜிஎஸ்டி உட்பட பல்வேறு சிரமங்கள் தொழில் துறையில் நிலவி வரும் நிலையில், மத்திய பட்ஜெட் தொழில் துறையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்க வேண்டும் என்ற கோவை தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:


கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிபாகம் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சவுந்திரக்குமார்: தொழில்துறையில் தாமிரம் மிக முக்கிய கனிமமாக இருக்கிறது. தாமிரத்தின் விலை கடந்த ஒரு மாத காலத்துக்குள் கிலோ ரூ.950-ல் இருந்த நிலையில் தற்போது ரூ.1300-ஆக உயர்ந்துள்ளது.


சில்வர், இரும்பு, காஸ்டிங், அலுமினியம் உட்பட பல்வேறு பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்திருப்பதால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருட்களுக்கு தேவையான பொருட்களின் விலை கட்டுக்கடங்காத நிலையில் உயரும்போது, பொருட்களின் விலையும் உயரவே செய்யும்.


நாள்தோறும் மாறிவரும் விலையேற்றத்துக்கு முடிவு கட்டும் வகையில் நிலையானதொரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். வெட்கிரைண்டர் உள்ளிட்டவைகளுக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%