கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா 29 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் கைது

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா 29 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் கைது

கோவை:

கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கில் தேடப்​பட்டு வந்த டெய்​லர் ராஜா, 29 ஆண்​டு​களுக்கு பிறகு கைது செய்​யப்​பட்​டார். 1998-ல் கோவை​யில் நடந்த குண்​டு​வெடிப்​பு​களில் 58 பேர் கொல்​லப்​பட்​டனர். இது தொடர்​பாக சிபிசிஐடி சிறப்​புப் புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​தனர்.


இவ்​வழக்​கில் அல்​-உம்மா இயக்​கத்​தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும், உக்​கடம் பிலால் காலனியைச் சேர்ந்த டெய்​லர் ராஜா (எ) ஷாஜ​கான் ஷேக் (48), முஜிபுர் ரஹ்​மான் ஆகியோரை போலீ​ஸார் தேடி வந்​தனர். இரு​வர் குறித்த தகவல்​களைத் தெரி​வித்​தால் ரூ.2 லட்​சம் லட்​சம் சன்​மானம் வழங்​கப்​படும் என போலீ​ஸார் தெரி​வித்​திருந்​தனர்.


இதற்​கிடை​யில், கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கு, மேற்கு மண்டல தீவிர​வாத தடுப்​புப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டு, எஸ்​.பி. பத்​ரி​நா​ராயணன் தலை​மையி​லான போலீ​ஸார் இரு​வரை​யும் தேடி வந்​தனர். கடந்த வாரம் ஆந்​தி​ரா​வில் பதுங்​கி​யிருந்த அபுபக்​கர் சித்​திக், முகமது அலி ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.


இதையடுத்து கிடைத்த தகவல்​கள் அடிப்​படை​யில், கர்​நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்​டத்​தில் தலைமறை​வாக இருந்த டெய்​லர் ராஜாவை தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் கைது செய்​து, கோவைக்கு அழைத்து வந்​தனர். கோவை ஜே.எம்​.5-வது நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட டெய்​லர் ராஜாவை, வரும் 24-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்​திரேட் உத்​தர​விட்​டார். தொடர்ந்து அவர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.


இதுகுறித்து காவல் துறை உயர​தி​காரி​கள் கூறும்​போது, “1996-ல் கோவை சிறை ஜெயிலர் பூபாலன் பெட்​ரோல் குண்டு வீசி கொல்​லப்​பட்​டார். அதே ஆண்​டில்​,​நாகூரில் சயி​தா, 1997-ல் மதுரை​யில் ஜெயிலர் ஜெயப்​பிர​காஷ் ஆகியோ​ரும் கொல்​லப்​பட்​டனர். இந்த வழக்​கில் முக்​கியக் குற்​ற​வாளி​யான டெய்​லர் ராஜா தலைமறை​வாக இருந்​தார்.


அல்​-உம்மா இயக்​கத்​தில் தீவிர​மாக இருந்த அவர், கோவை குண்​டு​வெடிப்பு சம்​பவத்​துக்கு வெடிமருந்து சப்ளை செய்​த​தில் முக்​கியப் பங்கு வகித்​தார். 29 ஆண்​டு​கள் தலைமறை​வாக இருந்த டெய்​லர் ராஜா கைது செய்​யப்​பட்​டுள்​ளார்” என்​றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%