குறள் வார விழா சிறப்பு காணொலி, பதாகை: முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, ஜன.
குறள் வார விழா நிகழ்வுகளுக்கான சிறப்பு காணொலியையும், பதாகையினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இம்மாதம் “குறள் வாரவிழாவைக்” கொண்டும் வகையில், சேலம், திருச்சி, தேனி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம், படத்தொகுப்புப் போட்டி நடைபெறவுள்ளது.
மதுரை, ஈரோடு, நாமக்கல், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பார் போற்றும் பட்டிமன்ற நடுவர்கள் தலைமையில் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. சென்னை, வள்ளுவர் கோட்டத்திலும், மெரினா கடற்கரையிலும் ஜேம்ஸ் வசந்தனின் தமிழோசை நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது.
திருப்பூரில் 21–ந் தேதி புதன்கிழமையன்று அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆசிரியர்கள் பெரும் அளவில் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு மற்றும் குறள் வினாடி-வினா நிகழ்ச்சிகள் மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளன.
1500 மாணவர்கள்
பங்கேற்கும் மாநாடு
முதலமைச்சரின் அறிவுரைக் கிணங்க, தமிழ் மொழிக்கென்று முதன்முறையாக ஆண்டுதோறும் நடத்தப்பெற்றுவரும் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்கள் கலந்து கொள்ளும் குறள் மாணவர் மாநாடு கன்னியாகுமரியில் 23–ந் தேதி மற்றும் 24–ந் தேதி ஆகிய இரு நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளன.
“திருக்குறள் திருவிழா தமிழ்மக்களுக்கானத் தெவிட்டாதப் பெருவிழா“ என்ற பெருமிதத்துடன் குறள் வாரம் நிகழ்வுகளுக்கென தயாரிக்கப்பட்டுள்ள சிறப்புக் காணொலியையும், நிகழ்வுகளுக் கானப் பதாகையினையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் வெளியிட்டார்.
இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் வே.ராஜாராமன், திருக்குறள் வார விழா நிகழ்வுகளுக்கான சிறப்பு அலுவலர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?