பெங்களூரு,ஜன.3-
கர்நாடகத்தில் ராஜாஜிநகர் எபாஜக எம்எல்ஏ ஆக இருப்பவர் சுரேஷ்குமார். 70வயதாகும்இவர், தொகுதிக்குங்ள சைக்கிளில் வலம் வருவது வழக்கம். இப்போது பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு702 கிமீ தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு 5நாட்களில் முடித்துள்ளார். குமரிக்கு சைக்கிளில் சென்றது,இது இரண்டாவது முறை ஆகும்.
கடந்த 51 வருடங்களாக சைக்கிளிலேயே பல இடங்களுக்கு சென்று வருவதாக அவர் கூறினார். சில மாதங்களாக படுத்தபடுக்கையாக இருந்த அவர்,உடல்நலம் தேறியதும் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அவரது முயற்சிக்கு பிரதமர் மோடிபாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று அவரை போனில் பிரதமர் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?