news Breaking News
clock

கலை இயக்குநர் தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சி துவக்கம்

கலை இயக்குநர் தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சி துவக்கம்


சென்னை, நவ.2 புகழ்பெற்ற திரைப்படக் கலை இயக்குநர் பத்மஸ்ரீ தோட்டா தரணியின் ‘புட்நோட்ஸ் ஆன் சினிமா’ (Footnotes on Cinema) என்ற தனித்துவமான கலை மற்றும் ஓவியக் கண்காட்சி, நவம்பர் 2, 2025 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் அலையன்ஸ் பிரான்சைஸுடன் இணைந்து கோலாகலமாகத் தொடங்கியது. இந்தக் கண்காட்சி நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. அலையன்ஸ் பிரான்சைஸ் மெட்ராஸ் தலைவர் திரு. டி.கே. துர்காபிரசாத் மற்றும் திரு. பிரவின் கண்ணனூர் ஆகியோர் துவக்கி வைத்த இந்த நிகழ்வை, இயக்குநர் மணிரத்னம், நடிகர் பசுபதி உள்ளிட்ட திரைப்பட மற்றும் கலைத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கண்டு ரசித்தனர். சினிமாவுக்கான தனது பணிகளைப் பிரதிபலிக்கும் வகையில், தோட்டா தரணியின் 125-க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. பழைய கால சினிமாவின் மாயாஜாலத்தை வெளிப்படுத்தும் வகையில், செட் அமைப்புகள், கேமரா குழுக்கள், விளக்குகள் போன்ற திரைக்குப் பின்னால் உள்ள நுட்பங்கள் இதில் ஓவியங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழைய கதவுகள், ஜன்னல் சட்டங்கள் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் அமைக்கப்பட்ட பிரேம்களில், காடா துணியில் ஸ்கெட்ச் பேனாக்களைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் காட்சியின் வசீகரத்தை உயிர்ப்பிக்கின்றன. சினிமாத் துறையில் அயராது உழைக்கும் கலைஞர்களின் பங்களிப்பைப் போற்றுவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்று தோட்டா தரணி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News