கருணை காட்டாயோ சகியே…

கருணை காட்டாயோ சகியே…


கருணை காட்டாயோ சகியே,

கண்ணீரில் இருக்கும் என் வேதனையை உணராயோ ...


நீ போன பாதை பார்த்து,

உன்னையே ஆவலுடன் தொடர்ந்தேன்.


விழிகளும் மூட மறுத்ததால் 

உறக்கத்தை தொலைத்தேன் அறியாயோ...


உன் வார்த்தை நம்பியே வாழ்ந்தேன்,

உன் மௌனம் மனதை வேதனையில் ஆழ்த்துவதை உணராயோ.... 


சகியே! சற்று திரும்பி பாராயா?

எனக்கு ஒரு மகிழ்ச்சி பாதையை காட்டாயோ..


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%