ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.1.23 கோடி மோசடி: ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டு ஆசைகாட்டி ஏமாற்றியவர் கைது

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.1.23 கோடி மோசடி: ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டு ஆசைகாட்டி ஏமாற்றியவர் கைது


 

சென்னை: வில்​லி​வாக்​கத்​தைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற மின்​வாரிய அதி​காரி மகேந்​திரன் (66). இவரை செல்போனில் அழைத்து பேசிய நபர் “ஆன்​லைன் பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​தால் அதிகலாபம் கிடைக்​கும். இதற்கு தேவை​யான உதவி​களை செய்து தரு​கிறேன்” என ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.


இதை நம்​பிய மகேந்​திரன் அந்த நபர் அறி​வுறுத்​திய பங்​கில் முதலீடு செய்​துள்​ளார். அதன்​படி அதிக லாபம் கிடைத்துள்​ளது. அந்த லாப பணத்தை அவர் எடுக்க முயன்​றபோது முடியவில்லை.


இதுகுறித்து கேட்​ட​போது, மேலும் பணத்தை முதலீடு செய்ய அறி​வுறுத்​தி​யுள்​ளனர். இதையடுத்து மகேந்​திரன் பல்​வேறு தவணை​களாக அவர்​கள் குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​கு​களில் ரூ.1.23 கோடி செலுத்​தி​யுள்​ளார். ஆனால் அவர் செய்த முதலீடு, அதற்​கான லாபம் எது​வும் கிடைக்​க​வில்​லை.


தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த மகேந்​திரன், அளித்த புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பண மோசடியில் ஈடு​பட்​டது ஈரோடு மூலப்​பாளை​யத்​தைச் சேர்ந்த செந்​தில் குமார் (41) என்​பது தெரிய​வந்​தது.


இவர் அங்​குள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் மேலா​ள​ராக​வும் பணி செய்து வந்​துள்​ளார். இதையடுத்து அவரை போலீ​ஸார் கைது செய்​து வி​சா​ரிக்கின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%