ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க மத்திய அமைச்சர் வேண்டுகோள்

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க மத்திய அமைச்சர் வேண்டுகோள்

மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சர் ராம் மோகன் நாயுடு கிஞ்​சா​ரபு

புதுடெல்லி: ஏர் இந்​தியா விமான விபத்து தொடர்​பான ஊக செய்​தி​கள் வெளி​யிடு​வதை மேற்​கத்​திய ஊடகங்​கள் தவிர்க்க வேண்டும் என்று மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சர் ராம் மோகன் நாயுடு கிஞ்​சா​ரபு நேற்று வேண்​டு​கோள் விடுத்துள்​ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: ஏர் இந்​தியா விமான விபத்து குறித்த இறுதி அறிக்​கைக்​காக அரசு காத்​திருக்​கிறது. அதுவரை மேற்​கத்​திய ஊடகங்​கள் ஊகங்​களை பயன்​படுத்தி செய்​தி​கள் வெளி​யிடு​வதை தவிர்க்க வேண்​டும். இந்​தி​யா​வில் கருப்புப் பெட்​டித் தரவை வெற்​றிகர​மாக டிகோட் செய்த விமான விபத்து புல​னாய்வு பணி​யகத்தை (ஏஏஐபி) பாராட்ட வேண்​டும்.


இந்​தி​யா​விலேயே தரவு​களை மீட்​டெடுக்​கும் அற்​புத​மான பணியை அவர்​கள் செய்​துள்​ளனர். முன்​ன​தாக, தரவு​களை மீட்​டெடுக்க கருப்பு பெட்​டியை வெளி​நாடு​களுக்கு அனுப்ப வேண்​டி​யிருந்​தது. முதல்​கட்ட அறிக்​கை​யும் நமக்கு கிடைத்​துள்​ளது.


முழு​மை​யான அறிக்கை கிடைக்​கும் வரை நாம் பொறுமை​யாக​ இருக்க வேண்​டும். இறுதி அறிக்கை வரும் வரை எந்த கருத்தையும் அரைகுறை​யாக புரிந்​து​கொண்டு கருத்து தெரி​விப்​பது நல்​லதல்ல. பாது​காப்பு அம்​சங்​களின் அடிப்​படை​யில் தேவையான அனைத்து உதவி​களை​யும் வழங்க தயா​ராக உள்​ளோம். இவ்​வாறு ராம்​ மோகன் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%