news Breaking News
clock

ஏங்கி தவிப்பேன்"

ஏங்கி தவிப்பேன்"



வானம் வெளுக்கும் 

முன் எழுந்திடுவாய்! 

சாணம் கரையும் 

தெளித்திடுவாய்!

பானம் அருந்து 

முன் வந்திடுவாய்!

நாணம் வந்தவுடன் 

பறந்திடுவாய்!

விளக்கின் கோலமிட்டு 

மன இருளை போக்கிடுவாய்!

வழக்கு போடும் முன் 

கண் எதிரே நின்றிடுவாய்!

எனக்கு ஒன்றென்றால் 

புழுபோல துடித்திடுவாய்!

கூடி வாழ்ந்ததில்லை!

கூடல் கொண்டதில்லை!

ஊடல் கொள்வதிலே

உனக்கு இணை யாரும் இல்லை!

வா ....வா.... எந்தன் மனமே!

ஏங்கி தவிப்பேன் தினமே!!!


-கவிஞர் பொன். பனகல் பொன்னையா.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News