என் ஊர் பேருந்து
நொடிக்கு ஒன்று
வந்தும் -ஏற
வரவில்லை மனம் .
கூண்டு கிளியாய்
துடிக்கும்
கடிகாரத்தை போல்
உந்தன் பின்னலில்
பின்னால்
லயித்து கிடக்கிறது மனம் .
மணிக்கணக்கில்
ஒத்தை மரமாய்
நின்று தவிக்கிறேனடி
உன்னை
எந்தன் அத்தை மகளாக்க !
லேட்டா வரணும்ன்னு
வேண்டிகிட்ட இருக்கும் போதே
வேகமா வந்து தொலைந்தது
உன் ஊர் மினி பஸ்.
கண் கடக்கும் தூரம் வரை
ஏக்கமாய்
சாலைகளை பார்த்து தொலைத்தது
மனம் .
காலங்கள் கடந்தது
காதலும் தொலைந்தது .
கடல் கடந்து உழைத்து
ஊர் திரும்பினாலும்
உறவு கூடி
திருமணம் நடத்தி வைத்தாலும்
உன் பெயரும் ,நினைவுகளும்
ஊசலாடும் உயிருக்குள்.
நம்பர் பிளேட் இல்லாத
உன் காதலின்
மினி பஸ் பயணத்திலிருந்து
யார் என்னை மீட்டெடுப்பது !
-லி .நௌஷாத் கான் -
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?