news Breaking News
clock

எங்கோ தொலைந்த ஒருவன்

எங்கோ தொலைந்த ஒருவன்


ஒரு மேகம் கலைந்து செல்வது போல 

என்னை எங்கேயோ தோலைத்துவிட்டேன்

எங்கே என்று 

தெரியவில்லை


என் நேசமானவர்களுக்கு 

என் வாசம் தெரியும் 

சுவாசம் இருக்கிறதா என்பதும் புலப்படும்

எனக்குத்தான் அது ஒன்றும் ஞாபகமில்லை 


ஒவ்வொரு மானுட முகங்களிலும்

நான் காண மாட்டேன்

என் அடையாளங்கள் அப்படியாக சொல்லக்கூடியதும் அல்ல

மரக்கிளைகளின் சாயலில்

விழுதுகளால் தாங்கிப் பிடித்தவனாக இருக்கலாம் 


ஒருவேளை நான் அமர்ந்திருந்த நதிக்கரையில்

சுற்றித்திரியும் தட்டான்களிடம் விசாரித்துப் பாருங்கள் 

ஒரு மழைப்பூச்சியின் கரங்களில் மன்றாடிக்கொண்டிருக்கலாம்


நதியோர நாணல்களில் வருடிக் செல்லும் தென்றலுடன் ஏதாவது கதைத்துக் கொண்டிருப்பேன்

உற்று நோக்கி என்னைச் சிறைப்பிடியுங்கள்


தயவுசெய்து என்னை எந்த ஒரு பூட்டிய வீட்டிலும் யாசிக்காதீர்கள்

நூலகங்களில் உள்ள ஏதோவொரு பழுப்போறிய பக்கத்தில் ஒரு காதுமடிக்கப்பட்ட காகிதமென சில 

கவிதை வரிகளைத் தின்று

சீரணித்தவனாக 

அடிக்கோடிட்டு பாதுகாப்பாக 

உதிரக் காத்திருக்கலாம்❤️


ஜவஹர் பிரேம்குமார்,

பெரியகுளம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News