ஊக்க மருந்து சோதனை தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை
Jan 08 2026
17
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பட்டியல் விவரத்தை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா) வெளியிட்டது. அதில் 120 பேர் புதிதாக இணைந்துள்ளனர். ஏற் கெனவே அந்தப் பட்டியலில் 227 பேர் இருந்த நிலையில், தற்போது பட்டிய லில் பதிவுபெற்றோர்களின் எண்ணிக் கை 347ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் நீக்கம் இதுதொடர்பான அறிக்கையின் மூலம் வெளியான தகவலில், 2025 டிசம்பர் வரை நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் 7,068 வீரர் - வீரா ங்கனைகளின் தரவுகள் சேகரிக்கப் பட்டன. சோதனை முடிவில் 120 வீரர் - வீராங்கனைகள் (1.5% பாதிப்பு விகிதம்) ஊக்க மருந்து சோதனை யில் (பதிவும் சேர்த்து) சிக்கியுள்ள னர். இது கடந்த ஆண்டை விட சற்று குறைவு என்றாலும், எண்ணி க்கை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. குறிப்பாக ரஜன் குமார் (கிரிக்கெட் - உத்தரகண்ட் வேகப்பந்து வீச்சாளர்), தனலட்சுமி சேகர் (தட களம் - தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை), ரத்தன் பாலா தேவி (கால்பந்து - இந்திய தேசிய வீராங்கனை) உள்ளிட்ட 3 பேர் தடை உத்தரவை பெற்றுள்ளனர். இரண்டாவது முறையாக ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தமிழ்நாட்டின் தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள் ளது. அதே போல அளவுக்கு அதிகமாக ஸ்டீராய்டு பயன்படுத்திய தற்காக ரஜன் குமார் இடைக்காலத் தடையை பெற்றுள்ளார். ரத்தன்பாலா வுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப் பட்டுள்ளது. புதிய இணைவு கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, தடகளத்தின் அவினாஷ் சேபிள், ஜோதி யாராஜி, தேஜஸ்வின் சங்கர் ஆகியோரும் ஊக்கமருந்து சோதனையில் புதிதாக இணைந்துள்ளனர். அவர்கள் தவிர ஹாக்கியிலிருந்து மன்பிரீத் சிங், சலிமா டெடெ, மல்யுத்தத்திலிருந்து அமன் ஷெராவத், கிரிக்கெட் வீரர் களான சப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், வீராங்கனைகளான தீப்தி சர்மா, ஷபாலி வர்மா ஆகியோர் ஏற்கெனவே அந்தப் பட்டியலில் தொடர்கின்றனர். நடப்பாண்டில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலை யில், இந்தியா ஊக்கமருந்து கட்டுப் பாடுகளை தீவிரமாக்கியுள்ளதால், இந்தப் பட்டியலில் இணைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?