உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம்
Dec 18 2025
13
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.12.2025 அன்று நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த முகாம் 01.10.2025 முதல் 31.12.2025 வரை அனைத்து வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பிற நிதித்துறை கிளைகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள் மற்றும் பிற நிதி சொத்துக்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உரிமையாளர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் தங்கள் உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்களை மீட்டெடுக்க உதவுவதும் ஆகும். வங்கிக் கணக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகளாக இருந்தாலோ, அவை ரிசர்வ் வங்கியின் வைப்புத் தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும். பொதுமக்கள் தங்கள் வங்கி வலைதளங்கள் அல்லது ரிசர்வ் வங்கியின் UDGAM (https://udgam.rbi.org.in) மூலம் இதை சரி பார்க்கலாம். உரிமையாளர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் இந்த தொகைகளை எந்த நேரத்திலும் முறையான ஆவணங்களுடன் வங்கியினை அணுகி ஆதாரங்கள் சமர்பித்து பெற்று கொள்ளலாம். வங்கித்துறை, காப்பீட்டுத்துறை மற்றும் நிதி தொடர்பான துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவார்கள். பொதுமக்கள் தங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களின் கோரப்படாத நிதி தொகையை மீட்டெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?