news Breaking News
clock

உரம் யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானம்

உரம் யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானம்



திருவண்ணாமலை, அக். 10- திருவண்ணாமலை மாவட்டம் நிலவி வரும் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.பெருமாள் வலி யுறுத்தியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திரு வண்ணாமலை மாவட்டக் குழு கூட்டம் வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் எ.லட்சுமணன், நிர்வாகிகள் ரஜினி ஏழுமலை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாநிலச் செயலாளர் பி.பெருமாள் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த பெருமாள் திருவண்ணாமலை மாவட்டம் நெல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல் சாகுபடிக்கு தேவை யான யூரியா, உரம் கடும் தட்டுப்பாடாக உள்ளது. உரம் யூரியா வாங்க கடைக்குச் செல்லும்போது தரமற்ற இணை இடுபொருட்களை வாங்க நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரம், யூரியா தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் 80 மையங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் 42 நெல் நிலையங்கள் தேசிய கூட்டுறவு நுகர்வோர் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு இதே போல உரிமத்தை தமிழக அரசு வழங்கியது. என்சிசிஎப் பெயரில் தனி யார் நெல் கொள்முதல் செய்தனர். பல மாதங்களாக பணம் தராமல் இழுத்தடித்த னர். எனவே என்சிசிஎப்க்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வசம் ஒப்படைக்க வேண்டும்”என்றார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News