news Breaking News
clock

உயிர்ச்சிலை!

உயிர்ச்சிலை!


கண்களிரண்டில் ஒடையாய் கண்ணீர் வடித்து!


காய்ந்து போன கோடையாய் காட்சியளித்து!


அருந்தும் நீரும் வருந்தும் நேரம் அருவியாகி


உன் நினைவால் வதைப்பட்டு பெண் நிழலுக்குள் புதைப்பட்டு வாடுவது சரியா? பாடுவது சரியா?


துயிலாமல்.....எழிலாமல் புலன்மறந்தப் பார்வையாகி அலைகடலில் விழுந்த வியர்வையாகி! ஒத்த உயிர் வாடுது! செத்த உயிர் ஆகுது!


பிரிவாயென்று சொல்லியிருந்தால் பிணைப்பின் இணைப்பில் இறந்திருப்பேனே


எப்போதும் என்னோடு - நீ இருப்பதாக நினைந்திருப்பேனே!


உயிர் வைத்து சிலை செய்தாய்! உடலை மட்டும் கொலை செய்தாய்! என்னடி நியாயம் இது!



எஸ். சந்திரசேகரன் அமுதா

செஞ்சி கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News