இன்ஸ்டாவில் கட்டுமஸ்தான போட்டோக்கள்... பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்த கல்யாண மன்னன்; சென்னையில் அதிர்ச்சி
Sep 22 2025
69
சென்னை
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 39). எம்.பி.ஏ. பட்டதாரியான இருர் ஏற்கனவே 2 திருமணங்களை செய்துள்ளார். அவர்களோடு குடும்பம் நடத்தி வந்த நிலையில் சுரேஷ்குமார் திருமண தகவல் மையம் மூலமாக மற்ற பெண்களுக்கும் வலை விரித்துள்ளார். இவரிடம் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான கணவனை இழந்த இளம்பெண் ஒருவர் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகியுள்ளார்.
அந்த பெண்ணிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை உங்கள் குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை சுரேஷ் அள்ளி வீசியுள்ளார். இதையடுத்து, இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி, சுரேஷ் குமாரை பார்ப்பதற்கு அந்த இளம்பெண் நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் குமாரும் இளம்பெண்ணும் சந்தித்துள்ளனர். அப்போது, ஆசை வார்த்தை கூறிய சுரேஷ் குமார் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், இருவரும் காரில் அமர்ந்து பேசியுள்ளனர்.
அப்போது, பையில் இருந்த இளம்பெண்ணின் 10 சவரன் தங்க நகையை சுரேஷ் திருடியுள்ளார். சுரேஷ் குமார் சென்ற பின்னர் தனது பையை சோதித்த இளம்பெண் அதில் இருந்த 10 சவரன் தங்க நகை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ் குமாரை கைது செய்தனர். சுரேஷ் குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?