இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி
Jul 25 2025
12

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன் பயிற்சியின் கீழ் தைரியமாகக் களமிறக்கிய வாஷிங்டன் சுந்தர் தான் இந்தியாவின் அடுத்த பெரிய ஆல்ரவுண்டர் என்று கூறுகிறார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் பிரிஸ்பனில் 2021-ம் ஆண்டு கிராண்ட் அறிமுகப் போட்டியில் களமிறங்கினார் வாஷிங்டன் சுந்தர். அறிமுகப் போட்டியிலேயே பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கினார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் வாஷிங்டன். சில முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸ்களையும் ஆடி கடினமான சூழ்நிலைகளில் பெரும் பங்களிப்பு செய்தார்.
ஒரு விதத்தில் நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு தன் 4 விக்கெட்டுகள் மூலம் வெற்றி வாய்ப்பை உருவாக்கியவரே வாஷிங்டன் சுந்தர்தான்.
இந்நிலையில் தற்போது வர்ணனையில் இருக்கும் ரவி சாஸ்திரி, “நான் எப்போதுமே வாஷிங்டன் சுந்தரை நேசிக்கிறேன். அவரை சந்தித்த அந்த முதல் நாளிலிருந்தே... இவர்தான்... இவர்தான் இந்திய அணியின் அடுத்த உண்மையான ஆல்ரவுண்டர் என்று நினைத்தேன். அதுவும் இந்தியாவுக்காக பலப்பல ஆண்டுகள் இவர் உண்மையான ஆல்ரவுண்டராகத் திகழ்வார் என்று கருதினேன்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?