
....... திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 20.08.2025 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் வீரட்டீஸ்வரர், நந்திகேச பெருமானுக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு வாசனை திரவியங்களை கொண்டு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், வெட்டிவேர் முதலியன வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. பலவண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து வேதங்கள் ஒலிக்க, சங்குகள் முழங்க, வில்வத்தினால் அர்ச்சனை, பூஜை செய்து பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாரதனை நடைபெற்றது. உற்சவமூர்த்திகள் மூன்று முறை ஆலயம் சுற்றி வந்தன.ஏராளமான பக்தர்கள் நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?