
வந்தவாசி, ஜூலை 25:
திருவண்ணாமலை மாவட்டம் ,
வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் சன்னிதியில் ஆடி மாத அமாவாசை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்திகள் புதிய பட்டாடை அணிந்து, வண்ண மலர் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு அர்ச்சனை நடைபெற்று மகா தீபாராதனை நடந்தேறியது.
இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%