அவரவரின் மனசாட்சி

அவரவரின் மனசாட்சி


_*உன்னால்*_

_*பயன் கிடைக்கும் வரை நீ நல்லவன்*_


_உன்னால்_ _எந்தவிதப்_ _பயனும்_

_இல்லை என்றால் நீ கெட்டவன், இது தான் இங்கு ஒருசிலரின் குணம்._ 


_*முள்ளைத் தாண்டித் தான் ரோஜா...*_

_*பலருடைய இழிச் சொல்லைத்*_

_*தாண்டினால் தான் நீ ராஜா.*_


 _அழகானது எல்லாம் போலியாக இருக்காது......_

_ஆனால்........_

_போலியான எல்லாம் அழகாகத்தான் இருக்கும்._


*_மனம் தான் வாழ்வின்_*

*_விளைநிலம்._*

*_அதன் தன்மையைப்_*

*_பொறுத்தே நம் வாழ்வு_*

_*அமைகிறது.*_


_பொய்க்கு_

_ஊரே சாட்சி_

_சொன்னாலும்,_

_உண்மைக்கு_

_ஒரே ஒரு சாட்சிதான்,_

_அது அவரவரின்_

_மனசாட்சி...._


_*தன்னை மட்டுமல்ல*_

_*அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்தது*_ _*தருமம்.*_


_ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்._


_*தினமும் யாராவது*_ _*ஒருவருக்கு*_

_*ஏதாவது*_ _*கொடுக்கவில்லை என்றால்*_ _*அவருக்கு தூக்கம் வராது.*_

_*அப்படி ஒரு பழக்கம்.*_


_அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ரகசியமாகக் கொடுப்பார்._


_*ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பணம் முடிப்பை கையில் எடுத்துக்கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார்.*_


_தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார்._


_*அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டுத் திரும்பி வந்துவிட்டார்.*_


_அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி! மனநிறைவு அவர் முகத்தில்! நிம்மதியாகத் தூங்கி எழும்பினார்._


_*மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.*_


_இதைக்_ _கேள்விப்பட்டதும்_

_பெரியவருக்கு_ _வருத்தமாகிவிட்டது._


_*போயும் போயும்*_ _*ஒரு திருடனுக்கு*_

_*உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.*_


_சரி இன்றைக்கு_ _யாருக்காவது_

_உதவி செய்வோம் என்று முடிவு_ _பண்ணினார்._


_*எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்.*_


_மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின்_ _கையில் யாரோ பணத்தைக்_

_கொடுத்து விட்டுப் போய் இருக்கிறார்கள் என்று பேச்சு._


_*அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார்.*_


_இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்._


_*மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தைக் கொடுத்தார்.*_


_மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்._


_*தினம் தினம் இப்படி*_ _*ஆகிவிட்டதே*_

_*என்று நினைத்துக் கொண்டு*_ _*படுத்துத் தூங்கினார்.*_


_அன்று இரவு ஒரு கனவு._

_அந்தக் கனவில் இறைவன் வந்தார்._


_*நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்தத் திருடன் திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் திருந்தி விட்டாள். அந்தச் செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார்.*_


_அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது._


_*அது*_ _*மட்டுமல்லாமல் தருமம்*_

_*தன்னை*_ _*மட்டுமல்ல*_

_*அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்தது.*_

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%