... திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர் -9 புதுப்பாளையம் ஒன்றியம் பனைஓலைப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கோ -கோ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பா. கோடீஸ்வரன் அவர்கள் உடற்கல்வி ஆசிரியர் சங்கர் அவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை வாழ்த்தினார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%