அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Oct 18 2025
78
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டாள். பின்னர் அந்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றதாக சார்லஸ் க்ராபோர்டு (வயது 59) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதியானது. எனவே சார்லசுக்கு 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவரது தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் கீழ் கோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து உத்தரவிட்டது. எனவே சார்லசுக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?