news Breaking News
clock

அமெரிக்காவில் ஊழியர்கள் பற்றாக்குறை; ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவில் ஊழியர்கள் பற்றாக்குறை; ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து


அத்தியாவசிய துறையில் பணிபுரியும் 7 லட்சம் பேர் ஒரு மாதமாக சம்பளம் இன்றி வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

வாஷிங்டன்,


அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படாததால் அனைத்து துறைகளும் முடங்கின. குறிப்பாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அத்தியாவசிய துறையில் பணிபுரியும் 7 லட்சம் பேர் ஒரு மாதமாக சம்பளம் இன்றி வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


மேலும் 6.5 லட்சம் பேர் கட்டாய விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 50 சதவீதம் அளவுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.


இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து துறை மந்திரி சீன் டபி தெரிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News