3 மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை கைது செய்த சென்னை போலீஸார்

3 மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை கைது செய்த சென்னை போலீஸார்

சென்னை:

3 மாநிலங்​களில் ஏராள​மான குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்​டு​வந்த முக்​கிய ரவுடியை சென்னை போலீ​ஸார் துப்​பாக்கி முனை​யில் கைது செய்​தனர். சென்னை சூளைமேட்​டைச் சேர்ந்த பிரபல ரவுடி மாடு தினேஷ் (39). இவர் மீது தமிழகத்​தில் மட்​டும் கொலை, செம்மர கடத்​தல், கஞ்சா விற்​பனை, வழிப்​பறி, திருட்டு உட்பட 30-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன.


2010 முதல் 15 ஆண்​டு​களாக இவர் தலைமறை​வாக இருந்து வந்​தார். தான் இறந்​து​விட்​ட​தாக கூட்​டாளி​கள் மூலம் போலீ​ஸாருக்கு தவறான தகவல்​களை கொடுத்​து, திரை மறை​விலிருந்து குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். சென்னை போலீ​ஸாரின் நெருக்​கடி​யால் இருப்​பிடத்தை ஆந்​தி​ரா​வுக்கு மாற்​றி​யுள்​ளார். அங்​கும் குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்டு கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இதே​போல் கர்​நாடகா மாநிலத்​தி​லும் இவர் மீது வழக்கு உள்​ளது.


இதையடுத்​து, இவரை கைது செய்து சிறை​யில் அடைக்க அதிதீ​விர குற்​றத் தடுப்​புப் பிரிவு போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், வேலூரை அடுத்த காட்​பாடி​யில் தினேஷ் பதுங்​கி​யிருப்​ப​தாக தகவல் கிடைத்​தது. எனவே சென்னை தனிப்​படை போலீ​ஸார் அங்கு விரைந்து சென்று துப்​பாக்கி முனை​யில் அவரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர். தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%