நெருப்புக்குச்சி

நெருப்புக்குச்சி


நெருப்புக் குச்சியாக நீ இருக்கணும்.. நிமர்ந்து நின்று தீமைகளை எரிக்கணும்.!


இருட்டு உலகத்துக்கு நீ

வெளிச்சம் ஏற்றணும்..

எங்குமிருள் விலகவே

விளக்காகணும்.!


திருட்டுத்தனம் இருட்டுல் நடக்குதே அதை உலகத்துக்கு

தீக்குச்சி காட்டுதே..


திருக்குறளை வெளிச்சத்திலேப் படிக்கணும்.. தீக்குச்சி தீபத்தை ஏற்றணும்!


கட்டாகப் பெட்டிக்குள்ளே இருக்கணும்.. காலம்வரும் காட்டுத்தீயாய் மாறணும்!


ஒட்டாக ஒற்றுமையாய் தீக்குச்சி இருக்கணும்.. 

ஒவ்வொருவர் மனசுக்குள்ளும் ஔிவிளக்கு ஜொலிக்கணும்!


தீப்பட்டியோடே.. தீக்குச்சி உரசணும்.. தீமைகளை நெருப்பினிலேக் கரைக்கணும்!


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%