தங்கம் என நினைத்து பித்தளை திரிசூலத்தை திருடியவர் கைது

தங்கம் என நினைத்து பித்தளை திரிசூலத்தை திருடியவர் கைது



பாலாஜி

சென்னை: கொடுங்​கையூர், கிருஷ்ண​மூர்த்தி நகர், வள்​ளுவர் தெரு​வில் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் உள்​ளது. இந்த கோயி​லில் உள்ள அம்​மன் கரு வறை​யில் இருந்த பொருட்​கள் கடந்த 3-ம் தேதி சிதறிக் கிடந்​தன. அம்​மன் சிலை கையி​லிருந்த பித்​தளை திரிசூலம் திருடு​போ​யிருந்​தது தெரிய​வந்​தது.


அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்​வாகி​கள் இதுகுறித்து கொடுங்​கையூர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தனர். அதன்​படி அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து அந்த பகு​தி​களில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளைக் கைப்​பற்றி ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.


இதில் கோயி​லில் திருட்​டில் ஈடு​பட்​டது வியாசர்​பாடி, முல்லை நகரைச் சேர்ந்த பாலாஜி (20) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். இதில் பாலாஜி வியாசர்​பாடி பகு​தி​யில் 2 இருசக்கர வாக​னங்​களை திருடியதும், அதில் ஒரு வாக​னத்​தில் சென்​று, கோயி​லில் புகுந்து திரிசூலத்தை திருடியதும் தெரிய​வந்​தது. மேலும் தங்​கம் என நினைத்து அதை திருடியதாக பாலாஜி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%