அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு



தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2006-இல் ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்ச ரின் மனைவி, சகோதரர்கள் யாரும் ஆஜராக வில்லை. அமைச்சரின் மூன்று மகன்களில் ஒருவரான மகேஸ்வரன் மட்டுமே ஆஜரானார். இதையடுத்து வழக்கை டிச.17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தர விட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%