பாலஸ்தீன கொடியுடன் விளையாடியதால் கிரிக்கெட் வீரர் மீது வழக்கு ஜம்மு - காஷ்மீர் காவல்துறை அடாவடி
Jan 04 2026
13
ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில் கிரிக்கெட் வீரர் ஒரு வர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்தினார். புத னன்று நடைபெற்ற ஜம்மு டிரெயில் பிளேசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி யில் ஜம்மு-காஷ்மீர் 11 அணி வீரர் பர்ஹான் பட் பேட்டிங் செய்யும் போது பாலஸ்தீன கொடியுடன் அவர் விளை யாடினார். இதனையடுத்து மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பாலஸ்தீன கொடி யுடன் கூடிய ஹெல்மெட்டை பயன் படுத்திய பர்ஹான் பட், ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக் அமைப்பாளர் ஜாஹித் பட், மைதான உரிமையாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தது. விசாரணைக்குப் பின் பர்ஹான் பட் மீது பிஎன்எஸ்எஸ் பிரிவு 173(3)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை விசாரணை வளையத்தில் வைத்துள்ளது ஜம்மு - காஷ்மீர் காவல்துறை. பாலஸ்தீன கொடியை பயன்படுத்தினால் குற்றவாளியா? இந்த லீக் போட்டிகள் தங்களால் நடத்தப்படவில்லை. பர்ஹான் பட் என்ற வீரர் எங்களுடைய சங்கத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அதனால் இந்த பிரச்சனைக் கும் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. இது அதிகாரப்பூர்வமற்ற போட்டி கிடையாது. சாதாரண உள்ளூர் போட்டி தான். பாலஸ்தீனத்திற்கு ஆத ரவாக அந்நாட்டின் கொடியை பயன் படுத்தியதில் என்ன தவறு? அவரை குற்றவாளியைப் போலவோ, பயங்கரவாதியைப் போன்றோ சித்தரித்தது தவறு என சமூகவலைத் தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?