பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் இழைக்கிறார்: எல்​.​முருகன் குற்றச்சாட்டு

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் இழைக்கிறார்: எல்​.​முருகன் குற்றச்சாட்டு

சென்னை:

பட்​டியலின மக்​களுக்கு திரு​மாவளவன் துரோகம் இழைக்​கிறார் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் குற்றச்சாட்டு தெரி​வித்​துள்​ளார்.


மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் காங்​கிரஸ் ஆட்​சியின் போது 2009 முதல் 2014 வரை தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு வெறும் ரூ.879 கோடி தான் நிதி ஒதுக்​கப்​பட்​டது.


ஆனால், பிரதமர் நரேந்​திர மோடி இந்த நிதி​யாண்​டில் மட்​டும் ரூ.6,666 கோடி தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ஒதுக்கி உள்​ளார். இது தவிர ரூ.33,467 கோடிக்கு பணி​களும் நடை​பெற்று கொண்​டிருக்​கிறது. மேலும், ரூ.2,948 கோடிக்கு தமிழக ரயில் நிலை​யங்​கள் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.


கடந்த 11 ஆண்​டு​களில் தமிழகத்​தின் வளர்ச்​சிக்​காக ரூ.10 லட்​சம் கோடிக்​கான பல்​வேறு திட்​டங்​களை பிரதமர் மோடி தமிழகத்​துக்​காக கொடுத்​திருக்​கிறார். மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வரும் 22-ம் தேதி நெல்​லை​யில் நடை​பெறும் பூத் கமிட்டி மாநாட்​டில் கலந்து கொள்​கிறார். அமலாக்​கத்​துறையை பொறுத்​தவரை அது சுதந்​திர​மாக செயல்​படக் கூடிய அமைப்​பு. அவர்​களுக்கு கிடைக்​கக்​கூடிய தகவல்​களின் அடிப்​படை​யில் சோதனை​கள் நடத்​தப்​படு​கிறது.


எங்​கள் கூட்​டணி பலமாக உரு​வாகி​யிருக்​கிறது. பழனி​சாமி மேற்​கொண்​டுள்ள யாத்​திரை​யில் மிகப்​பெரிய அளவில் மக்​களின் ஆதரவு பெரு​கி​யிருக்​கிறது. தமிழகத்​தில் எழுச்​சியை உரு​வாக்​கிக் கொண்​டிருக்​கிற இந்த யாத்​திரையை பார்த்து ஸ்டா​லின் ஏதேதோ பேசிவரு​கிறார். தூய்​மை பணி​யாளர்​கள் விவ​காரத்​தில் விசிக தலை​வர் திரு​மாவளவன் மாறி மாறி பேசுவது அவர் நிலை​யாக இல்லை என்​ப​தையே காட்​டு​கிறது.


தூய்மை பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும். தூய்மை பணி​யாளர்​களின் கல்வி தகு​திக்கு ஏற்​ற​வாறு அவர்​களுக்கு பணி உயர்வை வழங்க வேண்​டும். பட்​டியலின மக்​களுக்கு திரு​மாவளவன் மிகப்​பெரிய துரோகத்தை இழைத்து வரு​கிறார். கடந்த 5 ஆண்​டு​களில் பட்​டியலின மக்​களின் பிரச்​சினை​களுக்கு திரு​மாவளவன் குரல் கொடுத்​த​தில்​லை. அவர்​களது நலனில் திரு​மாவளவனுக்கு அக்​கறை இல்​லை.


திமுக கூட்​ட​ணி​யில் ஒட்​டிக்​கொள்ள வேண்​டும். அந்த கூட்​ட​ணி​யில் இருந்து எம்.பி, எம்​எல்​ஏ-க்​களாக வேண்​டும் என்​பது தான் அவருடையை குறிக்​கோள். அதி​முக - பாஜக கூட்​ட​ணிக்கு எந்த பாதிப்​பும் இல்​லை. 2026-ல் எங்​கள் கூட்​டணி பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும். திமுக கூட்​டணி படு​தோல்வி அடை​யும். திமுக​வில் இருந்து முக்​கிய​மான சிலர் எங்​களு​டன் பேசி வரு​கிறார்​கள். அவர்​கள் யாரென்று சொல்ல முடி​யாது. அவர்​கள் பாஜக​வில் இணை​யும் போது அனை​வருக்​கும் தெரியப்​படுத்​து​வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%