தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி


ஸ்ரீநகர்: ​காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.


ஜம்​மு - ​காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்​காம் பகு​தி​யில் கடந்த அக்​டோபர் மாதம் மத்​தி​யில் ஒரு போஸ்​டர் ஒட்​டப்​பட்​டிருந்​தது. ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பு சார்பில் ஒட்டப்பட்டிருந்த அதில் பாது​காப்பு படை​யினர் மீது தாக்​குதல் நடத்​து​வோம் என கூறப்பட்டிருந்தது. இது வழக்​க​மாக விடுக்​கப்​படும் மிரட்​டல் போஸ்​டர் போல் இருந்​தது.


ஆனால் ஸ்ரீநகர் எஸ்​எஸ்​பி​யாக உள்ள டாக்​டர் ஜி.​வி.சந்​தீப் சக்​கர​வர்த்​தி, இதுகுறித்து தீவிர விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார். இந்த போஸ்​டரை ஒட்​டிய​வர்​கள் சிசிடிவி கேமரா மூலம் கண்​டறியப்​பட்​டனர். அவர்​கள் மீது ஏற்​கெனவே கல் எறிந்த வழக்கு​கள் நிலுவையில் இருந்​தன. அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், தீவிர​வாத சதி குறித்த திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யா​யின.


இதையடுத்து மேற்​கொள்​ளப்​பட்ட ஆபரேஷனில் ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, மற்​றும் உத்தர பிரதேசத்​தில் காஷ்மீர் மருத்துவர்கள் பலர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​கள் ஜெய்​ஷ்-இ -முகமது அமைப்​புடன் சேர்ந்து தீவிர​வாத சதி திட்​டங்​களில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. உமர் நபி டெல்லியில் காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார்.


எனினும் பெரிய அளவிலான சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. இவர்​கள் கைதுக்​குக் காரண​மாக இருந்​த சக்​கர​வர்த்​தி, தலை​மையி​லான காஷ்மீர் போலீ​ஸார்​தான் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்​கொண்டு பஹல்​காம் தாக்​குதல் தீவிர​வா​தி​கள் 3 பேரை சுட்​டுக் கொன்​றனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


ஆந்​திராவை சேர்ந்தவர்: ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்​த சந்தீப் சக்​கர​வர்த்தி மருத்​து​வக் குடும்​பத்​தில் பிறந்​தவர். இவரது தந்தை மருத்​து​வர் ஜி.​வி.​ராமகோ​பால் ராவ், ஆந்​திர அரசுத்​ துறை​யில் மருத்​து​வ​ராக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.


தாயார் பி.சி. ரங்​கம்​மா, தற்​போது சுகா​தா​ரத்​ துறை​யில் மருத்​து​வ​ராக பணி​யாற்றி வரு​கிறார். ஜி.​வி.சந்தீப் சக்​கர​வர்த்​தி​யும் எம்​பிபிஎஸ் படித்​தவர்​தான். அதன் பின்​னர் தான் அவர் காஷ்மீரில் எஸ்​எஸ்​பி​யாக பணி​யாற்றி வரு​கிறார். அங்கு தீவிர​வாத ஆபரேஷன்​களில் ஈடு​பட்​டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%