தலை​மை செயல​கத்​தில் வேலை வாங்​கி தரு​வ​தாக ரூ.17.50 லட்​சம் மோசடி: தலைமறை​வாக இருந்​தவர் கைது

தலை​மை செயல​கத்​தில் வேலை வாங்​கி தரு​வ​தாக ரூ.17.50 லட்​சம் மோசடி: தலைமறை​வாக இருந்​தவர் கைது

சென்னை:

பாரி​முனை பகு​தி​யில் வசிப்​பர் ஜெய்​சங்​கர் (49). இவருக்கு ஓட்டேரியைச் சேர்ந்த முத்​து​ராமன் என்​பவரது அறி​முகம் கிடைத்​தது. அப்​போது, முத்​து​ராமன் தன்னால் தலை​மைச் செயல​கத்​தில் அரசு வேலை வாங்​கித் தர முடி​யும் என்று கூறியுள்​ளார்.


இதை நம்​பிய ஜெய்​சங்​கர் தனது உறவினர்​கள் இரு​வருக்கு தலை​மைச் செயல​கத்​தில் கம்​யூட்​டர் ஆபரேட்​டர் வேலை வேண்​டி, கடந்​தாண்டு ஜனவரி​யில் ரூ.17.50 லட்​சம் கொடுத்​துள்​ளார். முத்​து​ராமன் அதே ஆண்டு பிப்​ர​வரியில் அரசு வேலைக்​கான பணி நியமன உத்​தரவை ஜெய்​சங்​கரிடம் கொடுத்​துள்​ளார்.


அந்த உத்​தரவு போலி​யானது என தெரிய​வந்​ததால் ஜெய்​சங்​கர் இதுகுறித்து முத்​தி​யால்​பேட்டை போலீஸில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து முத்​து​ராமனை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். மோசடிக்கு உடந்​தை​யாக இருந்த கொளத்​தூரைச் சேர்ந்த மகேஷ் (36) தலைமறை​வாக இருந்​தார்.


அவரை தனிப்​படை அமைத்து போலீ​ஸார் தொடர்ந்து தேடி வந்​தனர். இந்​நிலை​யில், தலைமறை​வாக இருந்த மகேஷ் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார். அவரிட​மிருந்து போலி பணிநியமன ஆணை​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதையடுத்​து, அவர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%