சென்னையில் காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீஸார்: மெரினாவில் குளிக்க தடை

சென்னையில் காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீஸார்: மெரினாவில் குளிக்க தடை


 

சென்னை: காணும் பொங்கல் பாது​காப்​புப் பணி​யில் சென்​னை​யில் 16 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபட உள்​ளனர். குழந்​தைகள் காணா​மல் போவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளதோடு, மெரி​னா​வில் குளிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.


பொங்கல் பண்​டிகை​யின் ஒரு பகு​தி​யாக காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்​கிழமை) கொண்​டாடப்​படுகிறது. அன்​றைய தினம் பொது​மக்​கள் கடற்​கரை, பூங்கா உட்பட பொழுது​போக்கு மையங்​களுக்கு செல்​வது வழக்​கம்.


மக்​கள் அதி​கள​வில் கூடும் இடங்​களில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் இருக்க காவல் ஆணை​யர் அருண் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​துள்​ளார். குறிப்​பாக நகர் முழு​வதும் 16 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். இவர்​களு​டன் 1,500 ஊர்க்​காவல் படை​யினர் ஒருங்​கிணைந்து பணி​யாற்ற உள்​ளனர்.


மெரினா கடற்​கரை​யில் மட்​டும் சுமார் 3 லட்​சம் பேர் திரள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனவே உழைப்​பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்​காலிக காவல் கட்​டுப்​பாட்​டறை​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த பகு​தி​களில் உள்ள 7 சர்​வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்​களில் காவல் உதவி மையங்​கள் அமைக்​கப்​படும்.


அவசர மருத்​துவ உதவிக்​காக மருத்​து​வக் குழு​வினருடன் 8 ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் மற்​றும் மீட்​புப் பணிக்​காக தீயணைப்பு வீரர்​கள் அடங்​கிய 2 தீயணைப்பு வாக​னங்​கள் தயார் நிலை​யில் நிறுத்தி வைக்​கப்​படும். மீட்​புப் பணிக்​காக மோட்​டார் படகு​கள் மற்​றும் 200-க்​கும் மேற்​பட்ட நீச்​சல் தெரிந்த தன்​னார்​வலர்​கள் தயார் நிலை​யில் இருப்​பார்​கள்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%