சீனாவை பின்னுக்கு தள்ளி அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடம்
Jan 07 2026
16
புதுடெல்லி: சீனாவை மிஞ்சி உலகின் மிகப் பெரிய அரிசி உற்பத்தி நாடாக இந்தியா மாறியுள்ளது என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். புதிய வகை பயிர்களை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
இதில் 25 பயிர்களின் 184 புதிய வகை களை அமைச்சர் சவுகான் வெளியிட்டார். இதில் 122 தானியங்கள், 24 வகை பருத்தி, 13 வகை எண்ணெய் வித்துக்கள், 11 வகை மாட்டுத் தீவனங்கள், பருப்பு மற்றும் கரும்பில் தலா 6 வகைகள், சணல் மற்றும் புகையிலையில் தலா 1 வகையையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: இந்த புதிய வகை வித்துக்கள், விவசாயிகளுக்கு அதிக மகசூல், அதிக வருவாய் தரக்கூடியவை. இந்த புதிய வகை பயிர்கள் விவசாயிகளிடம் விரைவில் சென்றடைவதை வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
அரிசி உற்பத்தியில் சீனாவை மிஞ்சி இந்தியா மிகப் பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. கடந்த 2024-25-ம் ஆண்டில் இந்தியா 150.18 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்தது. இதே காலத்தில் சீனாவின் அரிசி உற்பத்தி 145.28 மில்லியன் டன்களாக இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய விதைகள் கார்ப்பரேஷன் (என்எஸ்சி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மனீந்தர் கவுர் திவிவேதி, என்எஸ்சியின் கடந்தாண்டின் இறுதி ஈவுத் தொகை ரூ.33.26 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?