கரூர் கூட்ட நெரிசல்: யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய் - வைகோ தாக்கு

கரூர் கூட்ட நெரிசல்: யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய் - வைகோ தாக்கு



 சென்னை,


மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். கரூர் சம்பவத்தில் முதல்-அமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார், ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார்.


2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். கூட்டணி தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அ.தி.மு.க.விலிருந்து அதன் பொதுச்செயலாளர் அனுப்பிவைத்த குழுவில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் இருந்தனர். அவர்களிடம் கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். 12 சீட்தான் என்றார்கள்.


இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது, இதற்கு உடன்பட முடியாது. இதைவிட அதிகமான சீட்களை கொடுக்க உங்கள் பொதுச்செயலாளர் ஒப்புக்கொண்டால், கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன்; அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதில் முக்கியமாகச் சொன்னவர் ஓ.பி.எஸ். ஆனால், அதிமுக பொதுச்செயலாளரிடம் சென்று ‘அவர் நம் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. அவர் சொல்வதுபோல் நம்மால் சீட் கொடுக்க முடியாது. அதனால் முறித்துவிட்டார்’ என்று பொய்யை சொல்லிவிட்டார். ஜெயலலிதா 15 தொகுதி ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%