ஆயிரம் ஆண்டுக்கு முன்பே நீடித்த வளர்ச்சிக்கு திட்டமிட்டவர் ராஜராஜ சோழன்: ஆ.ராசா புகழாரம்

ஆயிரம் ஆண்டுக்கு முன்பே நீடித்த வளர்ச்சிக்கு திட்டமிட்டவர் ராஜராஜ சோழன்: ஆ.ராசா புகழாரம்

சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு தொல்லியல் மாநாட்டில் ‘தொல்​லியல் நோக்​கில் சோழர்​கள் அன்​றும் - இன்​றும்’ என்ற ஆய்வு கட்​டுரை நூலை மலேசிய அமைச்சர் அ.சிவநேசன் வெளியிட்டார். உடன் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தமிழ் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன தலைவர் க.கலைமதி, பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவன தலைவர் சங்கர் கலியன், ரஷ்யா தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர் சாமியப்பன், ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்ற தலைவர் அருள் ஆறுமுகம், திமுக செய்திதொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: பல்​லா​யிரம் ஆண்​டு​கள் கடந்​தும் தமிழ்​மொழி செழித்து வாழ்​வ​தாக​வும், ஆயிரம் ஆண்​டுக்கு முன்பே நீடித்த வளர்ச்​சிக்​காக திட்​ட​மிட்டு செயல்​பட்​ட​வர் ராஜ​ராஜ சோழன் எனவும் ஆ.ராசா எம்.பி. புகழாரம் சூட்​டி​யுள்​ளார்.


பன்​னாட்டு தமிழ்க்​கல்வி ஆராய்ச்சி நிறு​வனம் (தமிழ்​நாடு), தமிழ் புலம்​பெயர் தமிழர் ஆய்வு நிறு​வனம் (அமெரிக்​கா), ரஷ்யா தமிழ்ச் சங்​கம் (ரஷ்​யா), ஈப்போ முத்​தமிழ்ப் பாவலர் மன்​றம் (மலேசி​யா) ஆகியவை சார்​பில் ‘பன்​னாட்டு தொல்​லியல் மாநாடு- 2025’ சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. திமுக துணை பொதுச்​செய​லா​ளர் ஆ.ராசா எம்​.பி. மாநாட்டை தொடங்கி வைத்​தார்.


சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற மலேசி​யா​வின் பேரா மாநில சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அ.சிவநேசனுக்கு வாழ்​நாள் சாதனையாளர் விருதை வழங்​கி​னார். தொடர்ந்து ‘தொல்​லியல் நோக்​கில் சோழர்​கள் அன்​றும் - இன்​றும்’ என்று ஆய்வு கட்​டுரை நூலை அமைச்​சர் சிவநேசன் வெளி​யிட்​டார்.


முதல் பிர​தியை அமெரிக்க மருத்​து​வர் மேனகா நரேஷ் பெற்​றுக்​கொண்​டார். இதையடுத்து உலகள​வில் பல்​வேறு நாடு​களில் இருந்து தமிழுக்கு தொண்​டாற்​றிய 20 பேருக்கு வாழ்​நாள் சாதனை​யாளர் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழ் புலம்​பெயர் தமிழர் ஆய்வு நிறுவன தலை​வர் க.கலைமதி வாழ்த்​துரை வழங்​கி​னார்.


மாநாட்​டில் ஆ.ராசா பேசி​ய​தாவது: பல ஆயிரம் ஆண்​டு​களுக்​கு பிறகும்​கூட தன்னை செழு​மைப்​படுத்​திக் கொண்டு வாழும் ஒரே மொழி தமிழ் மொழி. இன்​றைய அரசி​யல்​கூட மொழியை நோக்​கித்​தான் சென்று கொண்​டிருக்​கிறது. சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சி மூவேந்​தர்​களின் ஆட்சி என சொல்​லப்​பட்​டாலும், தமிழகம் ஒன்​றாக இருந்​தது சோழப் பேரரசின் ஆட்சி காலத்தில்​தான்.


அன்​றைய காலத்​தில் ஏரி​களை கட்​டிய ராஜ​ராஜ சோழன், அதன் கல்​வெட்​டு​களில் “எனக்கு பின் ஏரி​களை யார் சரி​யாக பராமரிக்கிறார்​களோ அவரது காலை எனது தலை​யில் வைத்து வணங்​கு​வேன்” என்று தெரி​வித்​துள்​ளார். இவ்​வாறு ஆயிரம் ஆண்டு​களுக்கு முன்பே நீடித்த வளர்ச்​சிக்​காக திட்​ட​மிட்​ட​வர் ராஜ​ராஜன். இவ்​வாறு பேசி​னார்.


முன்​ன​தாக அமைச்​சர் சிவநேசன் பேசும்​போது, “சமூக முன்​னேற்​றம் என்​பது 1940-களில் வந்​தது அல்ல. ராஜ​ராஜசோழனின் ஆட்சிக் காலத்​திலேயே வந்​திருக்​கிறது. வணி​கம் என்ற போர்​வை​யில் வந்து நம்மை 400 ஆண்​டு​கள் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் மத்​தி​யில், வளமான ராணுவம், திறமை​யான நிர்​வாகம் இருந்​தும் ராஜ​ராஜ சோழன் வணி​கத்​துக்​காகவே அண்டை நாடு​களுக்கு சென்​று​வந்​தார். எனவே சோழர்​களை பற்றி எந்த கோணத்​தில் ஆய்வு செய்​ய​வேண்​டும் என்​பது முக்​கி​யம்” என்​றார்.


இந்​நிகழ்​வில் திமுக செய்​தித் தொடர்பு பிரிவு தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோவன், மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா, பன்​னாட்​டுத் தமிழ்க்​கல்வி ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சங்​கர் கலியன், செய​லா​ளர் ஜான்​சி​ராணி, ரஷ்யா தமிழ்ச் சங்​கத் தலை​வர் சேகர் சாமியப்​பன், ஈப்போ முத்​தமிழ் பாவலர் மன்​ற தலை​வர்​ அருள்​ ஆறு​முகம்​ கண்​ணன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%