கருவறை அறிவு
யார் அறிவார்?
எவருக்கும் இல்லை;
கல்லறை அறிவும்;
எவருக்கு உண்டு?
இவரும்,அவரும்,
இருப்பையும்,இறப்பையும்,
இங்கும், அங்கும்,
பேசிப் பேசி,
சொல் பெருக;
அதன் அர்த்தம்
அனைத்தும்
அனர்த்தமாய்;
அனைவரின் மனதிலும்
பாரமாய்
ஏற்றியான பிறகு
இறப்பின் அச்சம்
இருப்பின் காலம்
முழுவதும் .
இவனின் பயம்
கல்லறையின் கன சுவரில்லை .
சட்டகத்திலிருந்து விடுதலையான ஆத்மனை நினைத்து இங்கிருக்கும் போதே;
பயத்திலும், கண்ணீரிலும்.
நனைந்து திண்டாடும்
மனித மனம்.

சசிகலா விஸ்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%