அறிவற்ற அறிவு

அறிவற்ற அறிவு


கருவறை அறிவு

யார் அறிவார்?

எவருக்கும் இல்லை;

கல்லறை அறிவும்;

எவருக்கு உண்டு?


இவரும்,அவரும்,

இருப்பையும்,இறப்பையும்,

இங்கும், அங்கும்,

பேசிப் பேசி, 

சொல் பெருக;


அதன் அர்த்தம் 

அனைத்தும் 

அனர்த்தமாய்;

அனைவரின் மனதிலும்

பாரமாய்

ஏற்றியான பிறகு

இறப்பின் அச்சம் 

இருப்பின் காலம்

முழுவதும் .


இவனின் பயம்

கல்லறையின் கன சுவரில்லை .

சட்டகத்திலிருந்து விடுதலையான ஆத்மனை நினைத்து இங்கிருக்கும் போதே; 


பயத்திலும், கண்ணீரிலும். 

நனைந்து திண்டாடும்

மனித மனம்.



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%