மறதி
வயோதிக வயதில்
வருவாரும் போவாரும்
எவர் என்றே தெரியவில்லை.
நினைத்து நினைத்துப் பார்த்தாலும்,
நினைவுத் தடம் நெகிழ்ந்து கொடுப்பதில்லை.
அவர் பேச, நான் கேட்கிறேன்.
நான் என்ன பேசுவது?
வந்தவர் குழம்பிப் போய் நகர;
மகன் சைகையால் ஏதோ சொல்ல முனைகிறான்;
என்னிடமா? அவரிடமா?
பதிவாக எதுவும் புரியாமல்
அலமந்து விழிக்கின்றேன்.
'சட்'
என்று நினைவின் கீற்று ஒன்று!
'கிட்டா!
இன்று டிசம்பர் ஒன்றாம் தேதி!
'உனக்கு பிறந்த நாள் இல்லையா?'
என்பவரைப் பார்த்து
சிரித்த,வைத்தா சொன்னான்:
' ஆமா அதற்கென்ன?'
கிட்டாவிடம் ஃபோன் செய்து, இதை சொல்ல வேண்டும்!'
என்று நினைத்துக் கொண்டான்; வைத்தா!

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%