ஒரு மணி நேரத்தில் திருப்பி தருவதாக கூறி வியாபாரிகளிடம் நகைகளை பெற்று நூதன மோசடி

ஒரு மணி நேரத்தில் திருப்பி தருவதாக கூறி வியாபாரிகளிடம் நகைகளை பெற்று நூதன மோசடி

சென்னை:

சென்னை, என்​எஸ்சி போஸ் சாலையில் நகைக்​கடை நடத்தி வருபவர் தில்​குஷ் ஜெயின் (50). கடந்த பிப்​.3-ம் தேதி அதே பகு​தி​யில் நகைக்​கடை நடத்​திவரும் வில்​லி​வாக்​கத்​தில் வசிக்​கும் சகோ​தரர்​கள் முகேஷ் ரங்கா (42), மணிஷ் ரங்கா (33) ஆகியோர் இவரிடம் 603 கிராம் தங்க நகைகளை வாங்​கிக் கொண்​டு, ஒரு மணி நேரத்​தில் திருப்​பித் தந்து விடுகிறோம் எனக்​கூறி சென்றவர்கள் மீண்​டும் திரும்பி வரவில்​லை. நகைகளு​டன் தலைமறை​வாகினர்.


அதிர்ச்சி அடைந்த தில்​குஷ் ஜெயின் இது தொடர்​பாக யானைக்​க​வுனி காவல் நில​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் சகோ​தரர்​களான முகேஷ் ரங்கா மற்​றும் மணிஷ் ரங்கா ஆகியோர் தில்​குஷ் ஜெயினிடம் பெற்​றதைப்​போல், மேலும் 5 நகை வியா​பாரி​களிடம் நகை​யைப் பெற்று திரும்ப கொடுக்​காமல் மோசடி செய்​தது தெரிய​வந்​தது.


இவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்தபோது இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 123 கிராம் தங்க நகைகள், 87 கிராம் வெள்​ளி, பணம் ரூ.2 லட்​சம் பறி​முதல்​ செய்​யப்​பட்​டன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%