குறுகிய நிலைப்படியில்
குட்டுகள் ஞாபகங்கள்//
மயில்சிறகினை ஒற்றையாய்
வைத்த புத்தக ஞாபகங்கள்//
ஒருவேளைச் சோறு
வறுமையின் ஞாபகங்கள்//
தைத்துப் போடும்
கிளிசல் ஞாபகங்கள்//
காசில்லாத ஊண்டியல்
சேமிப்பின் ஞாபகங்கள்//
வேற்றிடம் சென்றபின்
வேங்கையாய் இருப்பாய்//
பொன்னான அறிவுரைகள்
எதிர்கால ஞாபகங்கள்//
தலையில் தூக்கிக்
கொண்டாடுவான் ஒருவன்//
களிப்பில் சிரிப்பில்
கல்யாண ஞாபகங்கள்//
யாவும் சிற்றில்
சிதைத்த ஓவியமாய்//
வாழ்வும் அமையா
சிதைந்த ஞாபகங்கள்//
ஞாபகங்கள் யாவும்
வலிதந்து மிஞ்சினவே//
வலிதந்து மிஞ்சினவே//
-பானுமதி நாச்சியார்