tamilnadu epaper

தாலாட்டு

தாலாட்டு


ஆராரோ ஆராரோ

அம்புலியே ஆராரோ/


செக்கச் சிவந்தமகள்

செம்பருத்தித் தாலேலோ/


தமக்கைநான் தாலாட்டக்

கண்ணுறங்குத் தாலேலோ/


செந்நெல் விளைஞ்சிச்

செழித்திடத் தாயாரும்/


மெல்ல அசைந்திட

அன்புகொண்டு ஆட்டிட/


அக்காப் பாட்டெடுத்து

மெல்லிசையில் பாடிட/


ஆலமர நிழல்தன்னில்

தொட்டிலுக்குள் நீதுயில/


ஆதரவாய் நானிருக்க

அம்மாவும் வேலைசெய்ய/


கைநிறைய செல்வம்கொண்டுக்

காலமெல்லாம் சிறந்திட/


அழவேண்டாம் ஆராரோ

பயம்வேண்டாம் தாலேலோ/


வெட்டவெளி தொட்டிலிலே

வீசுமின்பக் காற்றினிலே/


பாசமிகுத் தமக்கையுமே

பாடிடுவேன் தாலாட்டே.../


-பானுமதி நாச்சியார்