tamilnadu epaper

அமைதி நிலவ வேண்டும்

அமைதி நிலவ வேண்டும்


அமைதி நிலவ வேண்டும் -உலகில்

அன்பு நிலைக்க வேண்டும்.

இமைகள் மூட மறந்த -மக்கள்

இனிதே உறங்க வேண்டும்!


குண்டு சத்தம் நீங்கி -நாட்டில்

குருவி பறக்க வேண்டும்.

நண்டுபோல் குழிக்குள் -ஒளியும்

நடுக்கம் மறைய வேண்டும்!


புதினும் கெலக்சியும் கூடிப் --பேசிப்

போரை நிறுத்த வேண்டும்

சிதறி ஓடும் அகதி -மகிழ்வாய்

சேர்ந்து வாழவேண்டும்!!


-குடந்தை பரிபூரணன்